ratcha-perumane - Christian Tamil Song Lyrics

Ratcha Perumane Thumbnail

Song Details

Songratcha-perumane
Music
Lyrics
Release Date

Tamil Lyrics

இரட்சா பெருமானே பாரும்,
புண்ணிய பாதம் அண்டினோம்
சுத்தமாக்கி சீரைத் தாரும்,
தேடிவந்து நிற்கிறோம்,
இயேசு நாதா, இயேசு நாதா,
உந்தன் சொந்தமாயினோம்.
மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
பாதுகாத்தும் வருவீர்,
ஜீவத் தண்ணீரண்டை என்றும்
இளைப்பாறச் செய்குவீர்,
இயேசு நாதா, இயேசு நாதா,
மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர்.
நீதி பாதை தவறாமல்
நேசமாய் நடத்துவீர்,
மோசம் பயமுமில்லாமல்
தங்கச் செய்து தாங்குவீர்,
இயேசு நாதா, இயேசு நாதா
ஒரு போதும் கைவிடீர்.
ஜீவ காலபரியந்தம்
மேய்த்தும் காத்தும் வருவீர்,
பின்பு மோட்ச பேரானந்தம்
தந்து வாழச் செய்குவீர்,
இயேசு நாதா இயேசு நாதா
ஊழி காலம் வாழ்விப்பீர்.

Share this song